03/12/2013

திருச்சி மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க துணைத்தலைவர் ரகுநாதன் வெளியிட்டள்ள அறிக்கை:

நீதி மன்ற வழக்குகள் சார்பாக ஏற்படும் செலவினங்களை எவ்வாறு ஈடு செய்வது என்பதற்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர்கள், சார்நிலை அலுவலர்களுக்கு உரிய அறிவுரை, எழுத்துப்பூர்வமான உத்தரவுகளை வழங்க வேண்டும்.
தற்போது வழக்கு சார்பான பணிக்கு வரும் அலுவலக பணியாளர்கள் தங்களது மாத சம்பளத்தில் இருந்து செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், இதற்கு உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புள்ளி விவரங்களை சென்னை தலைமை அலுவலகத்திற்கு நேரில் கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்கள் பணிக்கப்படுவதால் அரசு நிதி வீணாவதுடன், பணியாளரின் அன்றாட வேலையிலும் காலவிரயம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மின்னஞ்சல், அஞ்சல் மூலமாக விவரங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருகி வரும் வேலை பளுவிற்கிடையே பணிபுரியும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர் களை மாற்றுப்பணிக்கு உட்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேர்வு பணி மற்றும் மைய மதிப்பீட்டு பணிகளை கவனிக்க ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் கூடுதல் பணியிடம் உருவாக்க வேண்டும்.

அனைத்து மாவட்டத்திலும் நீதிமன்ற வழக்குகளுக்காக அலுவலர்களை உட்படுத்துவதை தவிர்த்து சட்ட அலுவலர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழகம் முழுவதும் வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கோரிக்கை அட்டையை அணிந்தும்,11, 13 தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களிலும், 27ம் தேதி, பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்திலும், ஆர்ப்பாட்டம் நடத்துவது என, சங்க நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள எங் கள் சங்கத்தை சேர்ந்த 1 லட்சம் பேர், திருச்சி மாவ ட்டத்தில் 350 பேரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font