24/12/2016

நாட்டு நலப்பணித்திட்ட மாநில ஆலோசனைக்கூட்டம்


ஐம்பத்து மூன்று வயதைக் கடந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி ரத்து; தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு பணியில் உள்ள பதவி உயர்வு பெற்றுள்ள உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:–

அரசுக்கு பரிந்துரை
2003–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் 2007–ம் ஆண்டு பணியில் சேர்ந்த தட்டச்சர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்வு செய்யப்பட்டு, 53 வயதை கடந்த நிலையில் உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
அவர்கள் இதுவரை பணியாற்றிய அனுபவமே போதுமானது என்பதாலும், பயிற்சி முடித்துவிட்டு குறைந்தது 5 ஆண்டுகள் கூட பணியாற்ற முடியாமல் போவதால் அரசுக்கு பண விரயம் உண்டாகும் எனவும், 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர் பதவியில் இருந்து உதவியாளராக பதவி உயர்வு பெற்றவர்கள் பவானிசாகரில் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டிருந்தது. இவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று பயிற்சி துறைத்தலைவர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

23/12/2016

தமிழக அஞ்சல் வட்டத்தில் பணி: ஜனவரி 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் தமிழக அஞ்சல் வட்டத்தில் 2017-ஆம் ஆண்டிற்கான 8 ஸ்கில்டு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

24.12.2016 நமது சங்கத்தின் சிவகங்கை மாவட்டப் பொதுக்குழு கூட்டம்


24.12.2016 நமது சங்கத்தின் மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம்


21/12/2016

TNPSC DEO EXAM CERTIFICATE VERIFICATION WILL BE HELD ON 27.12.2016 | TNPSC DEO தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

TNPSC DEO EXAM CERTIFICATE VERIFICATION WILL BE HELD ON 27.12.2016 | TNPSC DEO தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 06.08.2015 மு.ப, 07.08.2015 மு.ப. மற்றும் 08.08.2015 மு.ப ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 2432 தேர்வர்கள் பங்கேற்றனர். இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆசிரியர் பிரிவில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அழைக்கப்பட்ட 15 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-II தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு 27.12.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

G.O.455 for 1591 PG Asst Post Continuation Order

20/12/2016

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 1-7-2016ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் ஆணை

01.07.2016 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு அரசாணை

Due DA Calculator.xls

Seniority list for regular superintendent as on 15.03.2016

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வெளியீடு

Departmental Examinations, December 2016
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 23.12.2016 to 31.12.2016)

           Enter Your Application Number :DED16                                 
                                                                                          Date                  Month             Year
                Enter Your Date of Birth :         /                       /   
                                                                                               
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

14/12/2016

உடையார்பாளையம் கல்வி மாவட்ட பொதுக்குழு கூட்டம்;மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் மறைவுக்கு மௌன அஞ்சலி



                                                                                                                                            
 பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் உடையார்பாளையம் கல்வி மாவட்டம் சார்பாக பொதுகுழு 12.12.2016 மாலை உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்தலைவர் திரு வை.ஆசைத்தம்பி தலைமையில் கூடியது.மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

09/12/2016

அரசு அலுவலர் பயிற்சி நிலையம் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - 1 ம் அணி கோவை மையத்தில் (பெண்கள்) 14.12.2016 புதன்கிழமை முதல் 28.01.2017 சனிக்கிழமை முடிய நடைமுறைப்படுத்துதல் - பணியாளர்களை பயிற்சிக்கு அனுப்புதல் ஆணை மற்றும் பெயர்ப்பட்டியல் வெளியீடு

அரசு அலுவலர் பயிற்சி நிலையம் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - 1 ம் அணி கோவை மையத்தில் (பெண்கள்) 14.12.2016 புதன்கிழமை முதல் 28.01.2017 சனிக்கிழமை முடிய நடைமுறைப்படுத்துதல் - பணியாளர்களை பயிற்சிக்கு அனுப்புதல் ஆணை மற்றும் பெயர்ப்பட்டியல் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...




பவானிசாகர் பயிற்சி அக்ரிமெண்ட் பார்ம், ஆளறி அடையாள அட்டை, பயிற்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பயிற்சியாளரை பணிவிடுவிப்பு செய்ய சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் அனுமதி கோரும் முகப்புக்கடிதம் மற்றும் பயிற்சிக்கு பணிவிடுவிப்பு செய்யும் ஆணை ஆகியவற்றின் மாதிரி கோப்பினை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

மாநில தலைவர் அறிக்கை

மாண்புமிகு தமிழக முதல்வர்  அம்மாவின் மறைவிற்கு இன்று முதல் 11-12-2016 வரை ஏதாவது ஒரு நாளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்தவும்,அப்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்கள் நலன் காக்கும் வகையில் அறிவித்த ஆணைகளை நினைவுகூர்ந்து நன்றியுடன் கலந்த கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.எஸ்.இராஜேந்திர பிரசாத் அறிக்கைவிடுத்துள்ளார்.

06/12/2016

தமிழக முதல்வர் அவர்களின் மறைவுக்கு நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சார்பாக மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இராஜேந்திரபிரசாத் அவர்களின் அறிக்கை

அம்மா என்ற சொல் காற்றோடு கலந்து விட்டது.
அவர் கற்று தந்த பாடம்
எத்தகைய சோதனைகளை யும் துணிவுடன் எதிர் கொண்டு வெல்ல வேண்டும் என்பதே!
சோதனை , வேதனை, தோல்வி, துரோகம், நய வஞ்சகம், ஏய்த்து பிழைப்பது
போன்ற எல்லாவற்றையும்
முறியடித்து வெற்றி வாகை
சூடிய அம்மா நம்மிடம் இல்லை.
அம்மா என்ற சொல்  நம் முதல்வரின் அடையாளமே!.
அம்மா புகழ் ஓங்கட்டும்.அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டும்.

மாநில நிர்வாகிகள்,
பள்ளி கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கம்,
மாநில மையம்,சென்னை.

தமிழக அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தின் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார்.இரவு 11:30
மணிக்கு (05-12-2016) உயிர் பிரிந்ததாக அப்போல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்றன வியாழக்கிழமை வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறது.

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறது.

20/11/2016

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள்/உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் 15.11.2016 முதல் 02.01.2017 முடிய நடைபெறுதல் ஆணை மற்றும் பயிற்சியில் கலந்து கொள்வோரின் பெயர்ப்பட்டியல்

இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி -41 பணிநாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - 22-வது அணி பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் (இருபாலருக்கும்) 15.11.2016 முதல் 02.01.2017 முடிய நடைமுறைப்படுத்துதல் - பணியாளர்களை பயிற்சிக்கு அனுப்புதல் ஆணை மற்றும் பெயர்ப்பட்டியல் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் சென்னை-6 ந.க.எண்.73149/அ4/இ3/2016,  நாள்.10.11.2016 காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

12/11/2016

DEO EXAM RESULT PUBLISHED | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்விற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

CLICK HERE-DEO EXAM RESULT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட
விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

07/11/2016

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக அதிகரிப்பு: அரசாணை (அரசாணை எண் 105, நாள் 7.11.2016) வெளியீடு

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் (அரசாணை எண் 105, நாள் 7.11.2016) கூறியிருப்பதாவது:-

அடிப்படை விதிகள் - பணிப் பதிவேடுகளை பராமரித்து வருதல் - பணிப் பதிவேட்டில் பதிவுகளை செய்தல் - முறையான படிவங்கள் வரையறைப்படுத்துதல் - பொதுவான வழிகாட்டி குறிப்புகள் - தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு இணையத்தில் பதிவு செய்ய பயிற்சி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப் பதிவேடு விவரங்களை அரசு இணையதளத்தில் பதிவு செய்வது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலகப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த வாரம் டி.இ.ஓ தேர்வு முடிவு

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டிஇஓ) பணியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 2014 ஜூன் 8-ம் தேதி நடத்தப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட். பட்டதாரிகள் இத்தேர்வை எழுதினர். அதில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரம் பேருக்கு 2015 ஆகஸ்ட் 6, 7, 8 தேதிகளில் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. மெயின் தேர்வு முடிந்து 15 மாதங்கள் ஆகியும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழியிடம் கேட்டபோது, ‘‘டிஇஓ தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியிடப்படும்’’ என்றார்.

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு 9-ம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இத்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தியது. சென் னையில் 325 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 5,296 மையங் களில் தேர்வு நடத்தப்பட்டது.

03/10/2016

எட்டாம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு தபாலில் சான்றிதழ்

எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு விரைவு அஞ்சலில் சான்றுகளை அனுப்பியுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எட்டாம் வகுப்பு தேர்வை, தனித் தேர்வர்களாக எழுத விரும்பியோருக்கு கடந்த
ஏப்ரல் மாதம் தேர்வு நடந்தது. தேர்வில் பங்கேற்ற மாணவ- மாணவியருக்கு உரிய சான்றுகள் நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் 7ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படுகிறது. சான்றுகள் கிடைக்காதவர்கள், அந்தந்த அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தீபாவளி முதல் இணையதளத்தில் ரேஷன் கார்டு அறிமுகம்

புதிய ரேஷன் கார்டுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, தீபாவளி முதல் துவக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், நான்கு பிரிவுகளில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், பல மாதங்கள் ஆகியும் வழங்குவதில்லை. இதையடுத்து, புதிய
ரேஷன் கார்டுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அமல்படுத்த, உணவு துறை முடிவு செய்தது.

பி.எஃப் மூலம் வீட்டுக் கடன் வசதி: அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகம்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) காப்புறுதித் தொகையாக வைத்து குறைந்த விலை வீடுகளை மாதாந்திர தவணைமுறையில் வாங்கும் வசதி அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் 4 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இருப்பிட முகவரி இல்லாதவர்களுக்கும் 'ஆதார்':பரிந்துரை கடிதம் கொடுத்து பெறலாம்

'இருப்பிட முகவரி இல்லாதவர்களும், பரிந்துரை அடிப்படையில், 'ஆதார்' பெறலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், ஆதார் எண் வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்துகிறது.

PAY ORDER-250 BT POST,50 PRIMARY HM POST,50 HIGH SCHOOL HM POST

22/09/2016

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டக்கல்வி அலுவலகங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்

மேல்நிலை துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் 22.9.2016 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் புதன்கிழமை (செப். 21) பிற்பகல் 2
மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் DEPARTMENT OF EXAMINATION என்பதை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் HSC September/October 2016 Hall Ticket Download என்பதனை கிளிக் செய்து விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால் அனுமதி சீட்டு கிடைக்கும்.

21/09/2016

இளநிலை உதவியாளர்/தட்டச்சர்களுக்கு நாளை 22.9.2016 பதவியுயர்வு கலந்தாய்வு

தமிழ்நாடு அமைச்சுப்பணி 15.3.2016 நிலவரப்படி இளநிலை உதவியாளர்/தட்டச்சர்களுக்கு தற்காலிக அடிப்படையில் உதவியாளர்களாக பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 22.9.2016 இணைய வழியாக ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலங்களில் மதியம் 2.00 மணி முதல் நடைபெறுகிறது.

20/09/2016

மாநிலத் தலைவர் அறிக்கை

A.S.RAJENDRA PRASAD
PALLI KALVI THURAI 
NIRVAGA ALUVALAR SANGAM   DPI  CHENNAI  6

I am very happy to convey
that the JA to ASST Panel
released yesterday. There.may be some omissions &errors in the list. I request our association members to.bring the details of such missing in the seniority.list.
How the.right to include the name arises. whether restoration or clerical error
any other reason.

15.3.2016 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல்

15.3.2016 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல் காண/தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

குறிப்பு: தரவிறக்கம் செய்யப்பட்ட Excel  பைலை வானவில் அவ்வையார் பாண்ட் -யை பயன்படுத்தி ஓபன் செய்தால் முன்னுரிமை பட்டியலின் முழு விபரமும் காணலாம்.

14/07/2016

நமது சங்கத்தின் நீலகிரி மாவட்ட செயற்குழு கூட்டம்


அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் வேலை

அரசு தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் 3 ஓட்டுநர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.இப்பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டும் வகையில் இலகுரக வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும்.

13/07/2016

கோவை:பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தல்


வழக்குகளால் ஸ்தம்பிக்கும் பள்ளிக்கல்வித்துறை பணிகள், சட்ட நுணுக்கம் தெரியாத அலுவலர்களால் திணறல்

கல்வித்துறையில், சட்ட நுணுக்கம் அறியாத அலுவலர்களிடம் வழக்குகள் சார்ந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மாநில அளவில் நிலுவை வழக்குகள், அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு, பள்ளி இடப்பிரச்னைகள் உட்பட தனிப்பட்ட நபர், குழு என பல்வேறு வழக்குகள் தினமும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி:பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை

அனைத்து கல்வி அலுவலகங்களுக்கும் கம்ப்யூட்டர், இன்டர்காம், ஜெராக்ஸ் வசதிகளை, மாநில மையம் செய்து தர வேண்டும் என, பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தின் பள்ளிக்கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.கூட்டத்துக்கு, கல்வி மாவட்ட தலைவர் சுப்ரமணியகுமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் காளியப்பன் வரவேற்றார்.

மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்


24/06/2016

பொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகள்: நிதியமைச்சகம் அறிவிப்பு

பொது சேமநல நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகளை மத்திய நிதியமைச்சகம் 20.6.2016 அன்று அறிவித்துள்ளது.அதன்படி உயர்கல்வி அல்லது தீவிர சிகிச்சை காரணங்களுக்காக பொது சேம நல நிதியை இடையிலேயே திரும்ப பெற அனுமதியளித்து. இதற்கு முன்பு சந்தாதார் வைப்பு திட்டக் கணக்கை இடைநிறுத்தம் செய்து கொண்டாலும் 5 ஆண்டு நிறைவுக்கு பிறகே வைப்பு நிதியை பெற முடியும்.

2015-16 GPF ONLINE ACCOUNT SLIP PUBLISHED

22/06/2016

பழைய முறையில் பென்சன் கொடுப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் ஐ.பெரியசாமி பேசும்போது, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகள் வந்தன. இதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் 22.2.2016 அன்றே வல்லுனர் குழு அமைக்க உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அந்த குழுவின் பரிந்துரை அரசுக்கு கிடைக்க பெற்றவுடன் பழைய முறையில் ஓய்வூதியம் வழங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு பெற்ற ஆசிரியர்கள் பணிவரன்முறை செய்ய தேவையில்லை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் கடிதம்


18/06/2016

ஆதார் எண் வழங்காத ஓய்வூதியர்கள் அதற்கான புகைப்படம் எடுத்த நகல் ரசீது சமர்ப்பித்து பென்ஷன் பெறலாம்,” என, மாவட்ட கருவூல அதிகாரி அனுஜா தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆண்டு தோறும் மார்ச்சில் உயிருடன் உள்ளதை நிருபிக்க துணை கருவூலங்களில் 'லைப்' சான்று வழங்கி புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டு ஓய்வூதியம் பெறும் அனைவரும் ஆதார் எண் கட்டாயம் வழங்க வேண்டும். அது இருந்தால் தான் புதுப்பிக்க முடியும். ஜூன் மாதத்திற்குள் ஆதார் எண் வழங்காதவர்களுக்கு, ஜூலையில் பென்ஷன் நிறுத்தப்படும் என துணை கருவூல அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் நாகராஜ் மற்றும் செயலாளர் முரளி தலைமையில் ஊத்தங்கரை வட்டத்தில் 18.06.2016 அன்று புதிய வட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்கை நடைபெற்றது.

20/04/2016

ஆய்வக உதவியாளராக பணிபுரிபவர்களுக்கு தர ஊதியம் உயர்வு சார்பான அரசாணை எண்.63 நிதி(ஊதியப்பிரிவு)த் துறை நாள்:26.2.2011

தமிழக அரசின் அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு நடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணையதளத்தில் அறிவித்துள்ளது.

தமிழக அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.,கடந்த ஆண்டில் நவம்பர் 8ல் குரூப் 1 தேர்வு, ஆகஸ்ட் 1ல் பல்வேறு நிலைகளில் நுாலகர் தேர்வு, ஜூலை 11ல் உதவிபுள்ளியல் அதிகாரி தேர்வு டிசம்பர் 21ல் குரூப் 4 தேர்வு ஆகியவற்றை நடத்தியது. இவற்றிற்கான தேர்வு முடிவுகளை இன்று டி.என்.பி.எஸ்.சி.,இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தி இன்று அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தி இன்று அரசு ஆணையிட்டுள்ளது.
அரசாணை எண்:117 (நிதி/படிகள்) நாள்:20.4.2016. அகவிலைப்படி 119% லிருந்து 125% ஆக உயர்வு.

CLICK HERE -6 % DA-G.Os of Finance Department - Tamil Version

18/04/2016

தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை?

பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு, 45 நாட்கள் வரை பணி மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. அதில், கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெறாத இளநிலை உதவியாளர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பயிற்சி முகாம், மார்ச், 30ம் தேதி துவங்கியது. பயிற்சிக்கு பெயர் பட்டியல் அனுப்பிய, பல தலைமை ஆசிரியர்கள், பணியாளர்களை உரிய நேரத்தில் விடுவிக்காததால், பல பணியாளர்கள் பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை.

16/04/2016

6239 தற்காலிக பணியிடங்களுக்கு 1.1.2016 முதல் 31.12.2016 முடிய ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2016-17 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அனைத்துப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த கோவை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

தபால் ஓட்டுக்களை விரைவாக அனுப்புங்க: எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்

தேர்தல் பணி செல்லும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தேர்தலின்போது ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது, வாக்காளர்களுக்கு விரலில் மை வைப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். அரசு ஊழியர்களின் விவரங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே சேகரிக்கப்பட்டு தேர்தல் துறையால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.

கனிவான வேண்டுகோள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க இணையதள பார்வையாளர்களுக்கு வணக்கம்.பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்,உயர் அலுவலர்கள் ஆகியோருக்கு கனிவான வேண்டுகோள்.அனைவருக்கும் பயன்படும் வகையிலான எளிதில் கிடைக்காத,முக்கியம் நிறைந்த துறை சார்ந்த அரசு ஆணைகள்,செயல்முறைகள் போன்றவற்றை pdf வடிவில் ஸ்கேன் செய்து pktnas@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி அனைவருக்கும் பயன்படும் வகையில் அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.மறவாமல் தங்கள் முகவரி,பணிபுரியும் இடம்,பதவி,கைப்பேசி எண் ஆகியனவற்றையும் தெரிவிக்கவும்.வாருங்கள் நாம் கரம் கோர்த்து நமது துறையை மேன்மையடையச் செய்வோம்.நாமும் துறையால் நன்மை அடைவோம்.

15/04/2016

பள்ளிகளுக்கான குறைந்தபட்ச நிலம்; அரசின் முடிவை தெரிவிக்க உத்தரவு

பள்ளிகள் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச நிலம் தொடர்பாக, நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் மீது, அரசு எடுத்த முடிவை தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலை பள்ளி நிர்வாக சங்கத்தின் செயலர் ஜோசப் சுந்தர்ராஜ், தாக்கல் செய்த மனு:

50 ஆயிரம் புத்தகங்கள் மாணவர்களுக்கு தயார்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்க, புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம்!

தமிழகம் முழுவதும் நாளை துவங்க உள்ள, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களில், வாயில் கூட்டம் நடத்தி, துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க, ஆசிரியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

எட்டாம் வகுப்பு-ஏப்ரல்-2016 - தனித்தேர்வர் தேர்வு கூடம் நுழைவு சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணி வரன்முறை செய்யப்படாத ஊழியர் இறந்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

சிவகங்கை சண்முகம். திருப்புத்துார் நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் காவலாளியாக பணிபுரிந்தார். அவரது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை.

அரசு ஊழியருக்கு 6% கூடுதல் அகவிலைப்படி உயர்வு சார்ந்த தகவல்

தமிழக அரசு பணியாளர்களுக்கு 01.01.2016 முதல் 6% கூடுதல் அகவிலைப்படி வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும்,அதற்கான அரசாணைக்  கோப்பு முதல்வரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அரசாணை வெகுவிரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியருக்கு பதவி உயர்வுக்கான விதிகளை உருவாக்குவது அரசின் உரிமை. அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 2004 முதல் 2014 வரை பட்டதாரி ஆசிரியர்களாக நேரடியாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியராக இருந்து பதவி உயர்வு பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு தனியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்க வேண்டும். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் நேரடி பட்டதாரி ஆசிரியர்களுக்கும், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தலா 50 சதவீத இடங்கள் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெலின் தெய்வகுமார், செந்தில், ஜெயச்சித்ரா உட்பட 13 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

2016-17 ஆம் கல்வியாண்டு 1/6/16 அனைத்து பள்ளிகளும் திறப்பு - பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் . தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு 1/5/16 அன்று முதல் கோடை விடுமுறை


CPS ஓய்வு பெற்றவர்கள் பணப்பலன் பெறுவதில் சிக்கல்: விண்ணப்பத்தை நிராகரிக்கும் கருவூல கணக்குத்துறை


21/03/2016

4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து
வருகிறது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

16/03/2016

7th Pay Commission’s suggestions on NPS

7th CPC observes that Government employees who have joined service between 2004 and 2011 have suffered due to delay in investment in market though they contributed properly. Summary of suggestions of 7th Pay Commission relating to NPS.

05/03/2016

கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் ஆணை மற்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் ஆணை மற்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசாணை (நிலை) எண்: 80 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(க்யூ1)த் துறை நாள்:02.03.2016 காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...


New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and other Organisations – Empanelment of Accredited Hospitals - Approval of additional hospitals based on the recommendations of the Accreditation Committee – Notified - Orders issued.

பி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை

வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் வெ ளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

04/03/2016

தேர்தல் தேதி அறிவிப்பு: பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு

தமிழக தலைமைத்தேர்தல் ஆணையர் ராஜேஸ் லக்கானி கூறுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் கடைப்பிடிக்க வேண்டும். எந்த விதிமீறலிலும் ஈடுபடக் கூடாது. தமிழக அரசு புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக் கூடாது. முறைகேடு நடைபெறாமல் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாள்: மே-16

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 16-ம் தேதியில்,ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி டெல்லியில் அறிவித்தார்.
அசாம்:
அசாமில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டமாக 65 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 4-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெறும்.

03/03/2016

பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு இணை இயக்குநர்/துணை இயக்குநர்/உதவி இயக்குநர் மற்றும் அலுவலக மேலாளர் பணியிடங்கள் வேண்டுதல் சார்பான விண்ணப்பம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு இணை இயக்குநர்/துணை இயக்குநர்/உதவி இயக்குநர் மற்றும் அலுவலக மேலாளர் பணியிடங்கள் வேண்டுதல் சார்பான விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PDF - வடிவில் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...
WORD - வடிவில் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

தமிழ்நாடு அமைச்சுப்பணி-இளையோருக்கு நிகராக முன்னுரிமை உதவியாளர் பணியில் நிர்ணயம்-திருத்திய ஊதிய நிர்ணயம்-நிலுவைத் தொகை வழங்கக் கோருதல் சார்பாக விண்ணப்பம்

தமிழ்நாடு அமைச்சுப்பணி-இளையோருக்கு நிகராக முன்னுரிமை உதவியாளர் பணியில் நிர்ணயம்-திருத்திய ஊதிய நிர்ணயம்-நிலுவைத் தொகை வழங்கக் கோருதல் சார்பாக விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PDF - வடிவில் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...
WORD - வடிவில் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

19/02/2016

அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை சட்டசபையில் அறிவித்தார் முதல்வர்

சட்டசபையில் 110 விதியின் கீழ் நேற்று 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பால், கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதாக கூறி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

110 விதியின் கீழ் சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஜெயலலிதா சில அறிவிப்புக்களை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது : அரசு ஊழியர்களின் நலனில் தமிழக அரசு தனி அக்கறை கொண்டுள்ளது. அரசு ஊழியர்களுக்காக சில சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

05/01/2016

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் நமது சங்கத்தின் மாநில மாநாடு அழைப்பிதழ் வழங்குதல்

    நமது சங்கத்தின் மாநில மாநாடு அழைப்பிதழை மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தொல்லியல்,தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப்பண்பாடு துறை அமைச்சர் திரு கே .சி .வீரமணி அவர்களிடம் தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் சி&டி -யின் மாநிலத் தலைவர் திரு.பொ.சௌந்திரராஜன்,நமது சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்  திரு த.ல.சீனிவாசன்,பொருளாளர் திரு பி.நீதிமணி ஆகியோர் வழங்கினார்கள்.

SSA Head 7979 Post continution order Dec-2015

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி  முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையும் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் இளநிலை/ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு டிசம்பர்-2015 ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை

பொங்கல் மிகை ஊதியம் மற்றும் சிறப்பு மிகை ஊதியம் ஆணை வெளியீடு

01/01/2016

குறைந்தபட்ச மருத்துவ விடுப்பு எத்தனை நாட்கள் எடுக்கலாம்? தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்

திருப்பூர்: ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தில் ஐந்தாவது தளத்தில் கல்வித்துறை அலுவலகம்

திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள், புதிய கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு, மாற்றப்பட்டுள்ளன. கல்வித்துறைக்கு, ஐந்தாவது தளம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலகம், திருப்பூர் கே.எஸ்.சி., அரசு பள்ளி வளாகத்திலும்; மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், பழைய நகர் மாநகராட்சி பள்ளி வளாகத்திலும் செயல்பட்டன. வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி மேல்மாடியில், மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டது.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font