14/12/2016

உடையார்பாளையம் கல்வி மாவட்ட பொதுக்குழு கூட்டம்;மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் மறைவுக்கு மௌன அஞ்சலி



                                                                                                                                            
 பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் உடையார்பாளையம் கல்வி மாவட்டம் சார்பாக பொதுகுழு 12.12.2016 மாலை உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்தலைவர் திரு வை.ஆசைத்தம்பி தலைமையில் கூடியது.மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் மறைந்த அம்மா அவர்கள் கல்வித்துறைக்கு செய்த சாதனைகள் குறித்து பேசினர்.மாவட்ட செயலாளர் ரெ.சதீஷ் முன்னிலை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் ச.இராஜசிம்மன் இரங்கல் தீர்மானம் வாசித்தார்.முடிவில் கல்வி மாவட்ட பொருளாளர் திரு.அ.வெங்கடாசலம் நன்றி கூறினார்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font