05/03/2014

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபெறவிருக்கும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும்இன்று (மார்ச் 5) முதல் விநியோகிக்கப்படஉள்ளன. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை ரூ.50 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.பி.எட். முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பட்டதாரி ஆசிரியர்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுவதால், இரண்டாம் தாள் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது.



Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font