25/08/2015

நீதிமன்ற அவமதிப்பு வழக்கா? கல்வித்துறை எச்சரிக்கை... அலறும் கல்விப்பணியாளர்கள்...

யாரேனும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தால், வழக்குகளை கவனிக்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதனால் கல்வித்துறை பணியாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

22/08/2015

15.3.2015 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

15.3.2015 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு-தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் காண/தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...


15.3.2015 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல் காண/தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

16/08/2015

பி.எட்., படிக்க புதிய விதிமுறை

பி.எட்., படிப்புக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, நவம்பருக்கு, சென்னை உயர் நீதிமன்றம்
தள்ளி வைத்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழு, 2014ல்,ஆசிரியர் கல்வி தொடர்பாக, புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில், பி.எட்., - எம்.எட்., படிப்பை, ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துதல், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்தல் உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

4-ம் வகுப்பு படித்தவருக்கு அரசு வேலை தர உத்தரவு

எட்டாம் வகுப்பு படிக்கவில்லை' எனக்கூறி, கருணை வேலை அளிக்க மறுத்த, மின்வாரிய அதிகாரியின் உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த, திருமணி ராஜா என்பவர், தாக்கல் செய்த மனு:கள்ளக்குறிச்சியில், மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய என் தாய், 2012 ஜூலையில் இறந்தார். நான், நான்காம் வகுப்பு படித்துள்ளேன்; கருணை அடிப்படையில் வேலை கோரினேன்.

11/08/2015

புள்ளியியல் துறையாக மாறிய கருவூலத் துறை: அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ள கருவூலத் துறை அலுவலர்களுக்கு, இப்போது புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர புள்ளிவிவரங்களைச் சேகரித்து, சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அடிக்கடி அழைப்பு விடுப்பதால் ஊதியம் வழங்கும் பணியில் தொய்வு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

09/08/2015

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

 
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலப்  பேரவைக் கூட்டம் திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.முன்னதாக மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் மாநிலத் தலைவராக ஏ.எஸ்.ராஜேந்திர பிரசாத்,பொதுச் செயலாளராக டி.எல்.சீனிவாசன்,பொருளாளராக ப.நீதிமணி ஆகியோர் உட்பட இணை செயலாளர்கள்,துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாநில தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் எம்.வி.பால்ராஜ் முன்னிலை வகித்தார். அமைச்சுப்பணியாளர்களுக்கு இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆகிய பணியிடங்களை வழங்க வேண்டும்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font