24/05/2014

பிளஸ் 2 தேர்வைப்போல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும், கோவை மாணவர்கள் சாதனை சரித்திரத்தை எழுதியுள்ளனர்

மாநில அளவில், கடந்த ஆண்டு எட்டாம் இடத்தில் இருந்த கோவை, தற்போது 95.6 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அரசு தேர்வுத்துறையால் வெளியிடப்பட்டது.

TNDGE:SSLC MARCH - 2014 - RESULT ANALYSIS

பள்ளிக்கல்வித் துறை - சுற்றுச்சூழல்மன்ற செயல்பாடுகளை கவனிக்க ஒரு உதவி இயக்குநர் மற்றும் 32 முதுகலை பட்டதாரிகள் பணியிடங்கள் - தற்காலிகமாக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - 1.1.2014 முதல் 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களை கால்நடைகள் போல நடத்தும் பள்ளிகள்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.
வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.
பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.
வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த 19 பேரில், சேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள் மாணவி பஹிரா பானுவும் சாதனை படைத்துள்ளார்.

 மாணவி பஹிரா பானு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 89% ஆக இருந்தது. மாணவிகள் 93.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.0% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

EXPRESS PAY ORDER TO 790 BT's & PG's - 2014 APRIL & MAY

பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்ட்

* 19 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்.

*125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்.


*321 பேர் 497 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

*முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள்.

27.05.2014 - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - பள்ளிகல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிகல்வித் துறை முதன்மைச் செயலாளர் பங்கேற்பு

Expected DA From July 2014-Possibility Of Increase Of DA By 6%

Dearness Allowance is given twice a year in the months of January and July. The benefit of this allowance is being enjoyed by both central and state government employees.
Every time when the DA is given, there is an increasing curiosity among central and state government employees to know in advance the DA that they will get the next time. As everyone knows well, DA is calculated based on the increase of the price of the essential commodities. Hence, the expectation of the central and state government employees about the DA that they are going to get in the month of July 2014 is quite reasonable.

AICPIN and DA

To calculate the DA for July, we need the value of AICPIN. As of now, the value of AICPIN for only 3 months has come out. The table below shows the approximate AICPIN value for the next three months and is calculated based on three different AICPIN values. According to this calculation, the chance for getting a 6% DA seems more probable but DA depends on the AICPIN value of the next three months.

22/05/2014

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை கீழ்க்காண் இணையதளங்கள் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம்

CLICK HERE LINK 1 TO SEE RESULT SSSLC Examination Results - April 2014

CLICK HERE LINK 2 TO SEE RESULT SSSLC Examination Results - April 2014

CLICK HERE LINK 3 TO SEE RESULT SSSLC Examination Results - April 2014

CLICK HERE LINK 4 TO SEE RESULT SSSLC Examination Results - April 2014

என்ற இணையதள முகவரிகள் மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன்,பிறந்த தேதியையும் அளிக்க வேண்டும்.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய

எஸ்.எம்.எஸ் (குறுந்தகவல்) மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD, தகவல் அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, “TNBOARD 1234567,25/10/1996” என்று குறுந்தகவல் அனுப்பினால், பதிவு எண் 1234567 என்றும், 25/10/1996 என்பது பிறந்த தேதி எனவும் கொள்ளப்படும்.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 23.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்

தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 23.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு (Retotalling) Online முறையில் விண்ணப்பங்கள் வரவேற்றல் குறித்த செய்திக்குறிப்பு :

மார்ச்/ஏப்ரல் 2014 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (சுநவடிவயடடiபே) விண்ணப்பிக்கலாம். மார்ச்/ஏப்ரல் 2014 எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதி விடைத்தாள்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 31.05.2014 (சனிக் கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு டி.இ.டி., தேர்வில் 4,476 பேர் பங்கேற்பு

தமிழகத்தில், நேற்று நடந்த, மாற்றுத் திறனாளிக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), 4,476 பேர், பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கென, தனியாக, சிறப்பு டி.இ.டி., தேர்வை (இரண்டாம் தாள்) நடத்த, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, இத்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும், 39 மையங்களில் நடந்தது. காலை, 10:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, தேர்வு நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்

நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பஸ் பாஸ்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்துதான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலை யை தவிர்க்கும் வகை யில், நடப்பு கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் முன்கூட்டியே வழங்கிட பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதற்காக பஸ் பாஸ் தேவை பட்டியலை ஒவ்வொரு பள்ளியும் முன்கூட்டியே தயாரித்து போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

அரசு ஊழியர் விடுமுறை நாட்களை குறைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

அரசு ஊழியர்கள் விடுமுறை நாட்களை குறைக்க கோரிய வழக்கில் உத்தரவை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.திருச்சி, வயலு£ரை சேர்ந்தவர் இளமுகில். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

கல்வித்துறை விதி எண் 76 மற்றும் 77 ன்படி, விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதிக்க கூடாது என வழக்கு

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த தடை கோரிய மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அருண் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:தமிழகத்தில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் 15 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் படிக்கின்றனர். பள்ளிகள் அனைத்தும் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குநரின் கட்டுபாட்டில் உள்ளன. பள்ளி கல்வி விதிப்படி ஒரு நாளைக்கு 5.40 மணி நேரத்திற்கு குறையாமலும், ஆண்டுக்கு 200 நாளும் பள்ளி நடக்க வேண்டும்.இதில் 180 நாட்கள் கல்வி கற்பிக்கவும், 20 நாட்கள் தேர்வுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும்.இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வு அட்டவணை விவரம்:

அரசு கல்லூரிகளில் அருமையான படிப்புகள் - மாணவர்களே அறியுங்கள்!

சென்னையில் குறிப்பிட்ட சில அரசு கல்லுாரிகளில் மட்டும் பாதுகாப்பு, உணவியல், மனையியல், விஸ்காம் எனப்படும் விஷூவல் கம்யூனிகேஷன் ஆகிய படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பல்வேறு
வேலைவாய்ப்புகளும் காத்திருக்கின்றன.

கவுன்சலிங் செல்லும்போதே கல்வி உதவித் தொகை: மாநகராட்சி முடிவு

விபத்தில் பேராசிரியர் பலி: ரூ.63 லட்சம் இழப்பீடு : ஐகோர்ட் உத்தரவு

முதல் பட்டதாரி சான்று பெற அலைக்கழிப்பு; கலக்கத்தில் பி.இ., விண்ணப்பதாரர்கள்

தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை வாரம் இருமுறையாவது பார்வையிட்டு கண்காணிப்புப் பதிவேட்டில் பதிவுகள் செய்து அலுவலர்கள் பார்வையின்
போது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ. ஜான் சேவியர்ராஜ் கூறினார்.

Advances to Government Employees for the Celebration of Marriages – TN Government New Order

உயர்ந்தபட்ச கல்வித் தகுதி உள்ள திருச்சி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் நடக்கவில்லை; நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருச்சி சத்தியநாராயணன் தாக்கல் செய்த மனு:திருச்சி சரஸ்வதி விலாஸ் துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1998 ஜூன் 26 ல் நியமிக்கப்பட்டேன். இதற்கு ஒப்புதல் கோரி திருச்சி துவக்கக்கல்வி
அலுவலருக்கு பள்ளிச் செயலாளர் பரிந்துரைத்தார்.

+2 பயிலாமல் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து பட்டம் பெற்றவருக்கு பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து பட்டம் பெற்றவருக்கு பதவி உயர்வு வழங்க மறுத்து மாற்று திறனாளிகளுக்கான நலத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம்
ரத்து செய்தது.

2012 இல் தேர்வு எழுதியோருக்கும் 5% தளர்வு கேட்டு மீண்டும் முதல்வரிடம் மனு

2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பில், கே.புவனேஸ்வரி, எம்.ஏ.ரஷீதா பேகம், டி.சுதாமணி, எம்.சக்தி, எஸ்.அருண்குமார் உள்படபல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது.

பல்வேறு துறைகளில் பகுதி நேர, தாற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில ஊழியர்களாக நியமிக்கப்பட்ட 50 பேரை நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

Departmental Examinations, May, 2014 Memorandum of Admission (Hall Ticket)

14/05/2014

பிளஸ் டூ முடித்த மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்

பிளஸ் டூ மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளன. பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களில் சிலருக்கு தாங்கள் விரும்பியபடி மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம். நான் நன்றாகத்தான் தேர்வு எழுதினேன். இவ்வளவு குறைவாக மதிப்பெண் வந்திருக்க முடியாது என்றெல்லாம் சில மாணவர்கள் நினைக்கலாம். அதுபோன்ற நிலையில், விடைத்தாள் நகலைப் பெறுவது எப்படி? மதிப்பெண் மறுகூட்டலுக்கு என்ன செய்வது? விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய எப்படி விண்ணப்பிப்பது? தேர்வில் தோல்வியடைந்தால் உடனடி மறு தேர்வு எழுதுவது எப்படி? இப்படி... மாணவர்களிடம் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் கூறும் விளக்கங்கள் இதோ..

அண்ணாமலை பல்கலைக்கழக மே மாத தேர்வு நுழைவு சீட்டு இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டது

கல்வி கடனுக்கு பான்கார்டு அவசியம்:முன்னதாகவே விண்ணப்பிக்க அழைப்பு

பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டலில், மதிப்பெண் குறைந்தாலும், மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் வழங்கப்படும்-அரசு தேர்வுத்துறை

பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டலில், மதிப்பெண் குறைந்தாலும், மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் வழங்கப்படும்' என, அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவு விபரம்:பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டலில், வினா மற்றும் பக்கவாரியாக மதிப்பெண் மறுகூட்டல் செய்யப்படும். இதில், மதிப்பெண் கூடுதலாக வந்தால் மட்டுமே, கணக்கில் கொள்ளப்படும்.ஒரு விடை, மதிப்பீடு செய்யப்படாமல் அல்லது திருத்தப்படாமல் அல்லது திருத்தப்பட்டும் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்தால் மட்டுமே, உரிய மதிப்பெண் வழங்கப்படும்.

அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆய்வு

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து, மாவட்ட வாரியாக, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், அரசு மேல்நிலைப்பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தாலும், சில பள்ளிகளின், மாணவர்கள் தேர்ச்சி விகிதம், கடந்தாண்டை விட இந்தாண்டு குறைந்துவிட்டது.

சிவில் படித்தால் உடனடி வேலை ஐ.ஐ.டி., பேராசிரியர் தகவல்

''பொறியியலில், 'சிவில்' பாட பிரிவை தேர்வு செய்து, சிறப்பாக படித்தால், உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என, டில்லி ஐ.ஐ.டி., பேராசிரியர் செல்வம் பேசினார்.

அண்ணாமலைப் பல்கலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்: இதுவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இதுவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் எத்திராஜூலு நேற்று வெளியிட்ட அறிக்கை

மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் கூட்டு முயற்சி மற்றும் கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர்கள்/ஆசிரியர் அல்லாதோர் நீண்ட நாள் விடுப்பிலுள்ளவர்கள் விவரம் கோருதல் சார்ந்து-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்பப் படிவம்

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.

11/05/2014

பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி-1.1.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணை வெளியீடு

மே 21 முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மார்ச் 3 முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,242 தேர்வு மையங்களில் 8.79 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். பள்ளிகளின் மூலமாக 8.26 லட்சம் பேரும், தனித் தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் தேர்வுகளை எழுதினர்.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 14-ந்தேதி முதல் பெறலாம்

பிளஸ்–2 முடிவு வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.

ஐகோர்ட்டு உத்தரவு; பணி நிரந்தரமான 3 நாளில் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம்

பணி நிரந்தரம் செய்யப்பட்டு 3 நாட்கள் மட்டுமே பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் மரியபெனடிக்ட்(வயது 63). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு - முதலமைச்சரின் நடவடிக்‍கைக்‍கு பாராட்டு

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கல்வித்துறையில் மாணவர்களின் சிரமங்களைக்‍ குறைக்‍கும் வகையில் பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி, மதிப்பெண் சான்றிதழ்கள் பெறும்போது பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவும் செய்வதற்கு முதலமைச்சர்
செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

மறுகூட்டல், விடைத்தாள் பெற விண்ணப்பிக்கலாம்

பிளஸ்2 தேர்வர்கள் பிளஸ்2 தேர்வு மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 2014ல் தேர்வு எழுதிய பிளஸ்2 தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் கோரியோ அல்லது மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பிளஸ்2 தேர்வர்கள் இன்று காலை 10 மணி முதல் வரும் 14ம் தேதி மாலை 5 மணி வரை (ஞாயிறு நீங்கலாக) பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவே, தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு மே-12 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மே மாதம் 12 ம் தேதி முதல் மே 16 தேதி வரை சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் மோசமான தேர்ச்சி: முதல்வர் நடவடிக்கை அவசியம்

தோல்வி விரக்தி - 104 சேவைக்கு அழைப்புகள் குவிந்தன

கணிதம், இயற்பியல், வேதியியலில் 8,285 பேர் சதம்: பொறியியல் ‘கட் ஆப்’ மார்க் அதிகரிக்கும்

அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் முதலிடம்: கோவை மாணவியின் தன்னம்பிக்கை


பிரீத்தி, தந்தை மஞ்சுநாத், தலைமை ஆசிரியர் சந்திரசேகர்.

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவி எம்.பிரீத்தி, 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த போது, பிரபல தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு இடம் கிடைத்தும் செல்லாமல், படித்த அரசு பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பு பயின்று பள்ளிக்கு கெளரவத்தைத் தேடித் தந்துள்ளார்.

அரசாணை எண் 92: சில பிரச்சினைகள் - ஏமாற்றப்படும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள்

பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு தொடங்கியது: தமிழகம் முழுவதும் ஒரு மாதம் நடைபெறும்

அபாரமாக சதமடித்து சாதித்த விழியிழந்தோர் பள்ளி மாணவிகள்

திருச்சி பள்ளியில் பயின்றுவந்த விழியிழந்த மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து பார்வைத் திறன் உள்ளவர்களின் விழிகளை ஆச்சரியத்தில் விரிய வைத்துள்ளனர்.

தேர்வில் நானும் பலமுறை பெயில் ஆனவன்: மாணவர்களுக்கு நீதிபதி கர்ணன் உருக்கமான அறிவுரை

113 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் தமிழ் நாடு முழுவதும் 113 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தேர்ச்சி விகி தம் 90.6 சதவீதம் ஆகும்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.6 சதவீதம் அதிகம். 3,882 மாணவ மாணவிகள் கணக்கில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

நேதாஜியின் ஐ.என்.ஏ. படை தளபதி புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் காலமானார்.

இந்திய தேசிய விடுதலை போராட்ட படையின் தளபதியாக பணியாற்றிய புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் மலேசியாவில் காலமானார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான ஐ.என்.ஏ. எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்கள் அதிகமிருந்த படைக்கு புவான்ஸ்ரீ ஜானகி ஒரு படைத்தளபதியாக பணியற்றினார்.

இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்

இரட்டை பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு
ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது இவ்வழக்கில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

தேர்ச்சி விகிதம் குறைவுக்கு குமரி மாவட்டத்தில் 2 தலைமைஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. குமரி மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 95.14 ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட கூடுதலாக 1.11 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து 6ம் இடத்தையே தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறைந்த ஆசிரியர்கள் மீது திடீர் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ஏழ்மை நிலையிலும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியின் கல்விக்கு உதவுங்களேன்-செல்:9600143448.

சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் பயின்று 1168 மதிப்பெண் பெற்று சென்னையில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி எம்.சௌஜன்யா. இவர் ஆதி ஆந்திரர் வகுப்பை சேர்ந்த துப்புரவு தொழிலாளியின் மகள். மாணவியின் தந்தை மாலகொண்டைய்யா (50), கண்பார்வையற்றவர். மாதம்தோறும் அரசு தரும் 1000 ரூபாய் உதவி பணம் மற்றும் கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்துள்ளார். தாயார் 2007ம் ஆண்டு இறந்து விட்டார். தந்தையும் கண்பார்வையற்றவர். இந்நிலையில் வீட்டு வேலைகளையும் முடித்து இடைவேளையில் படித்து இவ்வளவு பெரிய சாதனையை எட்டியுள்ளார்.

அன்னையர்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்...

அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண், அன்னா ஜார்விஸ். தாயார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஆனால், அவரின் தாயார் நோய் வாய்ப்பட்டு 1905ம் ஆண்டு மே மாதத்தில் இறந்துவிட்டார்.

09/05/2014

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2014

TN-DGE: HSE MARCH - 2014 - RESULT ANALYSIS

01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL

01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் (அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 287 முடிய மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ம் இணைந்து 01 முதல் 1080 முடிய மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 04 முடிய மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் 01) இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

08/05/2014

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கீழ்க்காண் இணையதளங்கள் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு சார்ந்த முழு விபரம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. தமிழகத்தில் மார்ச்-3 முதல் மார்ச்-25 ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றன. மொத்தம் 2,422 தேர்வு மையங்களில் 8.78 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர்.

தேர்வு நிலை/சிறப்பு நிலைக்கு படிகள் - ஊதிய நிர்ணயம் சார்ந்த திருத்தியமைக்கப்பட்ட அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வி-அமைச்சுப்பணி-உதவியாளர் பதவியிலிருந்து பதவியுயர்வில் இருக்கைப்பணி கண்காணிப்பாளராகப் பதவியுயர்வு வழங்குதல்-15.03.2014-ல் உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்தல்-விபரங்கள் கோருதல்-சார்பு

பள்ளிக்கல்வி-அமைச்சுப்பணி-உதவியாளர் பதவியிலிருந்து  பதவியுயர்வில் இருக்கைப்பணி  கண்காணிப்பாளராகப் பதவியுயர்வு வழங்குதல்-15.03.2014-ல் உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்தல்-விபரங்கள் கோருதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின்  செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font